(எம்.எப்.ம்.பஸீர்)
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்த நபர் கல்முனை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என பொரளை பொலிஸார் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் அறிவித்தனர்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலைத் தொடர்ந்து, சஹ்ரான் ஹஷீமுடன் தொடர்புகளைப் பேணியமையை மையப்படுத்தி குறித்த சந்தேக நபர் கடந்த 2019 மே 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அன்று முதல் தடுப்புக் காவலின் கீழ் வைத்து விசாரிக்கப்பட்டுள்ள சந்தேக நபர், கடந்த 2021 ஏபரல் 6 ஆம் திகதி, கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையிலேயே சந்தேக நபர் கடந்த 2011 நவம்பர் 23 ஆம் திகதி சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் கடந்த 2021 டிசம்பர் 5 ஆம் திகதி மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மற்றப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந் நிலையிலேயே அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர், சிறுநீரகம் சார் பிரச்சினைக்காகவே சிகிச்சை பெற வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அது சாந்த நோய் நிலைமையே மரணத்துக்கு காரணம் எனவும் சிறைச்சாலையின் உள்ளக தகவல்கள் வெளிப்படுத்தின.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM