12-15 வயதுடைய சிறுவர்களுக்கு வெள்ளிக்கிழமை தடுப்பூசி

Published By: Vishnu

05 Jan, 2022 | 04:07 PM
image

நாட்டில் 12-15 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (07) ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

குறித்த வயதுடைய சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியின் டோஸினை வழங்க சுகாதார அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 15 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, அதே சமயம் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட உடல் நல சிக்கல்கள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

அதன்படி இதுவரை சுமார் 30,000 சிறுவர்களுக்கு கொவிட்-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந் நிலையில் வெள்ளிக்கிழமை முதல் 12-15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் இடங்களிலேயே ஆசிரியர்களும் பூஸ்டர் டோஸ்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

சுகாதார அமைச்சில் இன்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53