சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்புச் செய்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு மற்றொருவரைக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.
ஆனமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனமடு மெரங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணும் அவளது கணவருமான இரு பிள்ளைகளின் பெற்றோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பெண் சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவருடன் முரண்பட்டுக் கொண்டு நவகத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரோடு சென்று அவருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
பின்னர் சில நாட்களுக்கு முன்னர் தனது கணவருடன் சமாதானமாகி மீண்டும் தனது வீட்டுக்கு வந்துள்ள குறித்த பெண் கணவருடன் வாழ்ந்து வந்துள்ள போதும் அந்நேரம் அப்பெண் கர்ப்பமுற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் கடந்த மாதம் 20ஆம் திகதி குறித்த பெண் வயிற்று வலி எனத் தெரிவித்து ஆனமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அப்பெண் சட்டவிரோத கருக்கலைப்பு செய்து
கொண்டிருந்ததை தெரிந்து கொண்ட வைத்தியர்கள் அவரை மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளனர்.
தனது கணவர் வழங்கிய மாத்திரையினை உட்கொண்ட பின்னர் கருக்கலைப்பு ஏற்பட்டதாக அப்பெண் புத்தளம் வைத்தியசாலை வைத்தியர்களிடம் தெரிவித்திருந்ததோடு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்னர் கடந்த 30ஆம் திகதி ஆனமடு பொலிஸாரிடம் தனது கள்ளக்காதலன்
வழங்கிய மாத்திரையை உட்கொண்டதாலேயே தனக்கு கருக்கலைப்பு ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவளது முதலாவது வாய்மொழியின் அடிப்படையில் அவரது கணவரைக் கைது செய்துள்ள பொலிஸார் அவரது இரண்டாவது வாய்மொழிக்கமைய அவரது கள்ளக்காதலனைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM