நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் - ஜீவன் 

Published By: Digital Desk 4

04 Jan, 2022 | 05:26 PM
image

(க.கிஷாந்தன்)

" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் கோதுமைமா வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவை நாம் வரவேற்கின்றோம். அதேபோல எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நிலையானதொரு பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்." என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும், கல்வி, விளையாட்டு மற்றும் சுகாதாரத்துறைக்கு இம்முறை மலையகத்தில் கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் 04.01.2022 இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண விலையில் கோதுமைமா வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானமொன்றை எடுத்துள்ளது. இதன்படி பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பமொன்றுக்கு ஒரு கிலோ 80 ரூபாபடி 15 கிலோ கோதுமை மாவை பெற்றுக்கொள்ள முடியும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் வழங்கப்பட்டுள்ள இந்த நிவாரணத்தை நாம் வரவேற்கின்றோம். மக்களுக்கு உரிய வகையில் பங்கீடு இடம்பெறும். அதற்காக ஊழியர்களை நியமிக்கவுள்ளோம்.

நாட்டின் தற்போதைய நிலையில் நாட்டு மக்களுக்கு நிவாரணம் தேவைப்படுகின்றது. அதேபோல இடம்பெற்றுள்ள சிற்சில தவறுகளுக்கு ஆளுங்கட்சியில் உள்ளவர்கள் கூட்டு பொறுப்பை ஏற்கவேண்டும். அதனைவிடுத்து தனிநபர்மீது பழியை சுமத்த முற்படுவது தவறு. மக்களுக்கு சேவை செய்யவே பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களுக்கு அதனை வழங்குவதற்கே முற்பட வேண்டும். மாறாக குறைகூறுவதற்காக மட்டும் மக்கள் எம்மை நாடாளுமன்றம் அனுப்பவில்லை.  

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் விரைவில் உயர்நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கின்றோம். அதுவரை பொறுமையாக இருப்போம். கூட்டு ஒப்பந்தம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். தொழிலாளர்களின் வலி புரியாதவர்களே அரசியல் நோக்கி கூட்டு ஒப்பந்தத்தை விமர்சிக்கின்றனர்.

பெருந்தோட்டத் தொழிலில் ஈடுபடுவர்கள் அரச ஊழியர்கள் சில நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அவ்வாறு அல்ல. தனியார் நிறுவனங்களின்கீழ்தான் அவர்கள் பணியாற்றுகின்றனர். எனவே, கம்பனிகள்தான் நிவாரணம் வழங்க வேண்டும். தொழிலாளர்களை சுரண்டும் நிறுவனங்கள் அதனை வழங்குமா என தெரியாது.  

அதேவேளை, வீதி அபிவிருத்தி உட்பட உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் கடந்தாண்டு கவனம் செலுத்தப்பட்டது. கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு துறைகள் தொடர்பில் இவ்வருடம் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

4 ஆயிரம் இந்திய வீடுகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன. விரைவில் 10 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை செயற்படுத்துவோம்.

தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதே மறைந்த எமது தலைவரின் நிலைப்பாடாக உள்ளது. அந்தவகையில் தமிழ் பேசும் கட்சிகளின் முயற்சிக்கு ஆதரவு வழங்கப்படும். கூட்டத்தில் பங்கேற்றால்தான் ஆதரவு என்றில்லை. " - என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46