இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு கே. எல். ராகுல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராக கடந்த மாதம் நியமிக்கப்பட்ட ரோஹித் ஷர்மா, தென் ஆபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்தே ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவி கே.எல். ராகுலுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் தெரிவுக் குழுத் தலைவர் சேத்தன் ஷர்மா தெரிவித்தார்.
மூவகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடக்கூடிய தகுதி உடையவராக கே. எல். ராகுலை நாங்கள் பார்க்கின்றோம். அவருக்கு தலைமைப் பதவியில் மிகுந்த அனுபவும் இருக்கின்றது. தலைமைத்துவத்தில் அவர் தனது அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.
அப்படித்தான் தெரிவாளர்கள் அனைவரும் நினைக்கின்றனர். ரோஹித்துக்கு உடற்தகுதி போதாத இவ்வேளையில் தலைவர் பதவிக்கு ராகுல்தான் மிகப் பொருத்தமானவர் என நாங்கள் கருதினோம். அவர் மீது எமக்கு மிகுந்த நம்பிக்கை இருப்பதால் அவரை ஊக்குவிக்கின்றோம் என இந்தியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சேத்தன் ஷர்மா தெரிவித்தார்.
தென் ஆபிரிக்காவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர், அணித் தலைவராக ரோஹித் ஷர்மாவுக்கு முதலாவது தொடராக அமையவிருந்தது. ஆனால், உபாதையிலிருந்து அவர் பூரண குணமடையாததால் அவரது தலைமைப் பதவியை பொறுப்பேற்பது சற்று தாமதமடைந்துள்ளது.
இருபது 20 உலகக் கிண்ணம் மற்றும் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணம் ஆகிய போட்டிகள் இந்த வருடமும் அடுத்த வருடமும் நடைபெறவுள்ள நிலையில் ரோஹித்தின் உடல்நிலை குறித்து தெரிவாளர்கள் மிகுந்த அவதானம் செலுத்தி வருகின்றனர்.
எனவேதான் அவர் உடற்குதி பெறுவதற்கு ஏதுவாக அவருக்கு போதிய அவகாசம் வழங்கியுள்ளதாக சேத்தன் ஷர்மா மேலும் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, ஒருநாள் கிரிக்கெட் அணியின் உதவித் தலைவராக ஜஸ்ப்ரிட் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் 2017க்குப் பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜனவரி 19ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் குழாம்
கே.எல். ராகுல் (தலைவர்), ஷிக்கர் தவான், ருத்துராஜ் கய்க்வோட், விராத் கோஹ்லி, சூரியகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ரிஷாப் பன்ட், இஷான் கிஷான், யுஸ்வேந்த்ர சஹால், ரவிச்சந்திரன் அஷ்வின், வொஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரிட் பும்ரா (உதவித் தலைவர்), புவ்ணேஷ்வர் குமார், தீப்பக் சஹார், ப்ரசித் கரிஷ்ணா, ஷர்துல் தக்கூர், மொஹம்மத் சிராஜ்.
- (என்.வீ.ஏ.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM