அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று மாலை தீப்பந்த போராட்டம் புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் விலையேற்றம், விவசாயிகளின் உரப்பிரச்சினை, பால்மா தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடுயென பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஹெக்டர் அப்புஹாமி, கலந்து கொண்டார். இந்நிலையில் முன்னால் வடமேல் மாகான சபை உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் இபாஸ் நஸீர் மற்றும் புத்தளம் மாவட்ட அரசியல் தலைமைகள் பிரதேச மக்கள் ஆகியோர் இந்த தீப்பந்தப் போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
இதன்போது அரசுக்கு எதிராக மக்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM