இலங்கைக்கு கடத்தவிருந்த சுறா இறகு, கடலட்டை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களுடன் ஒருவர் கைது

Published By: Digital Desk 4

02 Jan, 2022 | 02:39 PM
image

(மன்னார் நிருபர்)

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அருகே வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த சுறா இறகு, கடல் அட்டைகள் மஞ்சள் கட்டி மூடைகள் உள்ளிட்ட சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பொலிஸார் நேற்று சனிக்கிழமை (1) இரவு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இராமநாதபுரம்  மாவட்டம் மண்டபம் அருகே  வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடல் அட்டை, சுறா இறகு , சமையல் மஞ்சள்  உள்ளிட்ட  பொருட்கள் கடத்த இருப்பதாக கியூ  பிரிவு பொலிஸாருக்கு இரகசிய  தகவல் கிடைத்தது.

 இதையடுத்து,  வேதாளை கடற்கரை பகுதியில் கியூ பிரிவு, மண்டபம் பொலிஸார் மற்றும் மண்டபம் வனத்துறையினர் இணைந்து அதிரடி  சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

இதன் போது வேதாளை தெற்கு தெருவில் சதாம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பதுக்கி வைத்திருந்த   34 மூடைகளில் 1,700 கிலோ மஞ்சள்,   13 மூடைகளில் 400 கிலோ சுறா  இறகு,  பதப்படுத்திய  கடல் அட்டை 100 கிலோ ஆகிய பொருட்களை  பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக சதாம் என்பவரை பொலிஸார் தேடி வருகின்றனர். 

சுமார் 40 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இப்பொருட்களை வேதாளை கடல் பகுதியில் இருந்து மர்ம படகு மூலம் இலங்கைக்கு நேற்று சனிக்கிழமை (1) இரவு கடத்த திட்டமிடப்பட்டிருந்தமை விசாரணையில் தெரிய வந்ததுள்ளதாக கியூ பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46