வாழைச்சேனையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு சென்று தொலைபேசி விற்பனை நிலையத்தை உடைத்துத் திருடியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் திருடிய தொலைபேசிகளை விற்பனைக்கு கொடுத்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – கே.கே.எஸ். வீதியில் சத்திரச்சந்தியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடந்த டிசெம்பர் 22ஆம் திகதி இரவு திருட்டு இடம்பெற்றது.
அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் விற்பனை நிலையத்தில் பெறப்பட்ட சி.சி.டீ.வி பதிவுகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவினர் நேற்றுமுன்தினம் வாழைச்சேனைக்குச் சென்று சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து, திருடப்பட்ட தொலைபேசிகளை விற்பனை செய்து கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டதுடன் 6 தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து குறித்த சந்தேக நபர்கள் மூவரும் யாழ்ப்பாணம் அழைத்து செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM