(இராஜதுரை ஹஷான்)
சந்தையில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு இன்னும் 3 வார காலத்திற்குள் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும். சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தரம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளை முறையாக செயற்படுத்துவோம்.
பாதுகாப்பான சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஸாரா ஜயசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சமையல் எரிவாயு கசிவு வெடிப்பு சம்பவத்தினை தொடர்ந்து நுகர்வோர் சமையல் எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்வதை தவிர்த்ததால் பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டோம்.
தர நிர்யணத்திற்கமைய எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு ஒழுங்குப்படுத்தல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
லிட்ரோ எரிவாயு நிறுவனம் சமையல் மற்றும் வணிக எரிவாயு சிலிண்டர்களை பாதுகாப்பான முறையில் உற்பத்தி செய்யவும் விநியோகிக்கவும் துரிதகரமான நடவடிக்கையினை தற்போது மேற்கொண்டுள்ளது.
சிலிண்டரின் பாதுகாப்பின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ள காரணத்தினால் விநியோக கட்டமைப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
வழமையான நாட்களில் ஒரு நாளைக்கு 40ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டன.
கடந்த மாதங்களில் 350000 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டன.
தற்போதைய நிலைமையில் லிட்ரோ சமையல் எரிவாயுவிற்கான கேள்வி உயர்மட்டத்தில் காணப்படுகின்றன.
எதிர்வரும் நாட்களில் 180,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க எதிர்பார்த்துள்ளோம். எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாதமத்தினால் நுகர்வோர் எதிர்கொண்டுள்ள அசௌகரியங்களுக்காக கவலையடைகிறோம் .
இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் நேரடி கண்காணிப்பிற்கமைய தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன. எரிவாயு சிலிண்டருக்கு தற்போது சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டுக்கு இன்னும் 3 வார காலத்திற்குள் தீர்வு முன்வைக்கப்படும்.
பாதுகாப்பான சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்து நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளை முழுமையாக செயற்படுத்தியுள்ளோம். சமையல் எரிவாயு கசிவுடனான வெடிப்பு சம்பவங்களுக்கு பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்தின.
எரிவாயு கலவையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதங்களில் மாத்திரம் ஒரு நாளைக்கு 300 இற்கும் அதிகமான சிலிண்டர்களின் பாதுகாப்பு தரத்தினை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.தற்போது அந்நடவடிக்கை 20000 ஆயிரம் வரை உயர்வடைந்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM