வென்னப்புவ - வைக்கால பகுதியில் வங்கியொன்றில் கொள்ளையிட முற்பட்டதாக கூறப்படும் வங்கியின் முகாமையாளர் உட்பட நால்வரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் 15 மற்றும் 19 ஆம் திகதிகளில் வங்கியினுள் நுளைந்து சிலர் திருட முற்பட்டுள்ளதாக வங்கியின் முகாமையாளர் கொடுத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேக நபர்கள் வங்கியின் பாதுகாப்பு கெமராக்களை செயலிழக்க செய்துவிட்டு, வங்கியின் பின் கதவால் நுளைந்து வங்கியில் உள்ள பணப் பாதுகாப்பு இடத்தினை துளையிட்டு திருட முயற்சித்துள்ளதை கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில் வங்கியின் முகாமையாளர் உட்பட நால்வரை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலும் 3 பேர் சம்பவத்துடன் தொடர்புப்பட்டுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரையும் இன்று மாரவில நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM