விண்வெளிக்கு ஏவப்பட்ட விண்கலம் ஒன்றின் பாகமான டப்ளியூ. ரி 1190 எப் என்ற வான் பொருள் இன்று இலங்கையின் தென் கடற்பரப்பில் விழவுள்ளது. இன்றைய தினம் முற்பகல் 11.45 மணிக்கு கடலோரத்திலிருந்து 62 மைல் தூரத்திற்கு அப்பாலே குறித்த வான் மர்மபொருள் விழும் என்று விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டு மீற்றர் அளவினை கொண்ட குறித்த வான்பொருள் விண்வெளிக்கு அனுப்பப் பட்ட அப்பலோ விண்கலத்தின் பாகமாக இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.
மேலும் குறித்த மர்ம பொருளை அவதானிப்பதற்கு இலங்கை விண்வெளி ஆய்வு கூடத்தின் விஞ்ஞானிகள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பவியல் ஆராய்ச்சி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விண்வெளிக்கு அனுப்பப்பட்ட விண்கலமொன்றின் பாகம் இன்று முற்பகல் 11.45 மணியளவில் இலங்கையின் தென் கடற்பரப்பில் விழவுள்ளது. இதன்படி தென் கடலோரத்திலிருந்து 62 மைல் தூரத்திலேயே குறித்த பாகம் விழும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறித்த விண்கல பாகமானது இரண்டு மீற்றர் அளவினை கொண்டதாக காணப்படும். இந்த விண்கல பாகம் 1960 முதல் 1970 வரையிலான காலப்பகுதியின் போது விண்வெளிக்கு அனுப்பப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. குறிப்பாக அப்பலோ விண்கலத்தின் பாகமாக இருக்க கூடும் என்றே விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.
இதேவேளை குறித்த பாகமானது, அனைவராலும் கண்காணிக்கும் வகையில் பாரிய ஒ ளியுடன் விழும் என ஐரோப்பிய விண்வெளி கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இந்த பாகத்தின் சில பகுதிகள் பூலோக அண்டவெளியில் சிதறி அழிவடைய கூடும். இதேவேளை சில வேளைகளில் குறித்த பாகம் முழுவதும் சிதறி அழிவடையலாம் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது.
மிகவும் சிறிய அளவிலான வான் மர்மபொருள்கள் ஐந்து இலட்சத்திற்கும் மேல் விண்வெ ளியில் காணப்படுகின்றன. நான்கு அங்குலத்திற்கு அதிகமாக வான் பொருட்கள் 20 ஆயிரத்திற்கும் மேல் காணப்படுகின்றன. இவ்வாறான வான் மர்மபொருட்கள் மணிக்கு 17 ஆயிரத்து 500 வேகத்தில் அல்லது அதற்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கும். இவ்வாறான வான் பொருட்களின் வேகத்தினால் விண்கலத்திற்கு அல்லது செயற்கை கோளுக்கும் ஆபத்து ஏற்படக் கூடும்.
இலங்கை தென் கடலோரத்தில் விழவுள்ள குறித்த வான் மர்மபொருள் இயற்கையானது அல்ல. மாறாக மனிதனால் விண்வெளிக்கு அனுப்பட்ட விண்கலத்தின் ஒரு பாகமாகும். டப்ளியூ. ரி 1190 எப் என்ற நாமம் கொண்ட வான் மர்மபொருளை கண்காணிப்பதற்கு தயாராக இருக்கிறோம். இதனை அவதானிப்பதாக இருந்தால் முற்பகல் 10.30 முதல் 12.30 வரையிலான காலப்பகுதியின் போது அவதானிக்க முடியும். இதேவேளை இலங்கையின் தென் வான் மற்றும் கடற்பரப்பை நேற்றும் இன்றும் எச்சரிக்கை வலயமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. ஆகையால் குறித்த தினங்களில் மீனவர்கள் எவரும் மீன்பிடிக்க செல்லக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM