உஸ்பெகிஸ்தானில் இருந்து பல பெண்கள் பாலியல் தொழிலுக்காக இலங்கைக்கு கடத்தப்படுவதாக இலங்கை மனித கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இவர்கள் இவ்வாறு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர்.
தற்போது இந்தப் பெண்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரும்பாலான வெளிநாட்டு பெண்கள் அரசாங்க தங்குமிடங்களில் ஆதரவைப் பெறத் தயங்குகிறார்கள், அதற்குப் பதிலாக ஐ.நா. முகவர் நிலையங்கள் அல்லது தனியார் தங்குமிடங்களை விரும்புகிறார்கள் என்று அதிகாரி கூறினார்.
மேலு, இவ்வாறு பாதிக்கப்படும் பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை 2 அல்லது 3 ஆண்டுகள் இலங்கையில் தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
சக்திவாய்ந்தவர்களின் ஆதரவுடன் இயங்கும் சில விபசார விடுதிகளுடன் உள்நாட்டு கடத்தல் தொடர்கிறது. எனவே இதுபோன்ற விபசார விடுதிகள் குறித்து அடிக்கடி எச்சரிக்கப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்துவதைத் தடுத்தல் தொடர்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படும் மனித கடத்தல் தடுப்பு செயலணியானது தீர்மானித்துள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM