இன்றைய காலகட்டத்தில் குழந்தை பேறின்மையால் தவிக்கும் தம்பதியர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு இருக்கிறது. குறைபாடுகள் பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் சமமாக அதிகரித்து கொண்டு வருகிறது. உணவு பழக்கவழக்கங்களும், வாழ்க்கை முறைகளும் மாறி வருவதால் பெண்களில் நீர்கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள் அதிகமாகின்றன.
குழந்தையின்மைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று கருக்குழாய் அடைப்பு. ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்து ஒரு சிசுவை உண்டாக்கும் முக்கிய பாலம் தான் சினைக்குழாய். சினைக் குழாய்கள் பெண்களின் கர்ப்பப்பையில் இடது, வலது என இருபுறமும் இருக்கும். சினைக் குழாயின் ஒருபக்கம் கர்ப்பப்பையினுள் திறந்த நிலையில் இருக்கும் மறுபக்கம் கரு முட்டைப்பையின் அருகில் இருக்கும். கர்ப்பப்பையிலிருந்து வரும் ஆணின் உயிரணுக்களையும், கரு முட்டையையும் சினைக்குழாய்க்குள் எடுத்து சென்று கருத்தரிக்கும் சிசுவை 48 மணி நேரத்திற்குள் கர்ப்பப்பை அறைக்கு சேர்த்து விடலாம். கருக்குழாயில் கருத்தரிக்கும் சிசு, கருக்குழாயினுள் செல்ல இயலாமல் குழாயிலேயே தங்கி, வளர்ச்சி அடையவும் இது காரணமாகலாம். இது பெண்ணின் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். கருக்குழாய் அடைப்பை ஸ்கேன், எக்ஸ்ரே, லெப்ரோஸ்கோப்பி மூலமும் கண்டுபிடிக்கலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் கருவுறாமை அதிகமாக காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் கருக்குழாயில் ஏற்படும் பிரச்சினைகளாகும். அதனால் ஏற்படும் விளைவுகளை பார்ப்போம்.
கருக்குழாயில் அடைப்பு இருந்தது என கண்டறியப்பட்டால் நமக்கு தெரிய வேண்டிய மற்ற விவரங்கள் ஒரு பக்கமா அல்லது இரண்டு பக்கங்களிலுமா?, கர்ப்பப்பை பக்கத்திலா அல்லது முட்டைப் பையின் அருகிலா?, டியூப்பை சுற்றி சரியாக உள்ளதா? அது மட்டுமன்றி மற்ற இன்பக் ஷன்கள் இருக்கிறதா? என முழுவிவரமும் தெரிந்து கொள்ள வேண்டும்.
கருக்குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கு முன்பு இவை எல்லாவற்றையும் சரியாக கணிக்க வேண்டும். இல்லாவிட்டால் கருக்குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்கிய பிறகு கூட மற்ற காரணங்களால் கருத்தரிப்பது கடினமாகிறது. சிலர் இந்த கணிப்புக்கள் எதையும் செய்யாமல் அதற்குரிய டெக்னிக்கல் சப்போட் கருவிகள் இல்லாமல் லெப்பரோஸ்கோப்பி செய்து கொண்டு மட்டும் வருகிறார்கள். இதனால் மறுபடியும் ஒரு அறுவை சிகிச்சைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது செலவும் பன்மடங்காகிறது. இதில் முக்கியமான சிகிச்சை என்னவென்றால் கருக்குழாய் அடைப்பு நீக்கல்.
பருவ வயதிலோ அதன் பிறகு வரும் நோய்களாலோ இது ஏற்படுகிறது. முக்கியமாக இது ஹிஸ்டிராஸ்கோப்பி மற்றும் லெப்ரோஸ்கோப்பி மூலமாக செய்யப்படுகிறது. இதில் வெற்றி விகிதம் அதிகம். 30 வீதம் இதற்காக ஸ்பெஷலாக செய்யப்பட்ட நூலிழை போன்ற டியூப்பை விட்டு அடைப்பு நீக்கப்படுகிறது. சில சமயம் ஒரு பக்கம் நீக்கினாலே சாதாரணமாக கருத்தரிக்க வாய்ப்பு உள்ளது. இதில் உடனடியாக கருத்தரிக்கும் வாய்ப்பும் உண்டு. நான் இதுபோன்று பல பேருக்கு சிகிச்சை செய்து இன்று அவர்கள் இரு குழந்தைகளுடன் சந்தோஷமாக உள்ளார்கள். அடுத்த குழந்தைக்கு வாய்ப்புகள் அதிகம். இதனால் ஏற்படும் மகிழ்ச்சி மிக மிக அதிகம். இதன் பக்க விளைவுகள் குறைவு. வேறு எந்த சிகிச்சையும் தேவைப்படாது.
சில சமயம் கருக்குழாயின் நுனியில் அடைப்பு ஏற்படலாம். இது ஒட்டியும் இருக்கலாம். லெப்ராஸ்கோப்பி செய்யும் போது நுனி பகுதியை அதற்குரிய கருவியை வைத்து பெரிதாக்கலாம். இதில் மிக அதிக ப்ரஷரில் தள்ளினாலே கருக்குழாய் விரிவடைந்துவிடும்.
Neoostomy இது கருக்குழாயின் நடுவில் அல்லது டியூபின் மூன்றாம் பகுதியிலோ அடைப்பு இருந்தால் புதிதாக ஒரு துவாரம் போட்டு அதன் வழியே செய்யப்படுகிறது. இதில் குறைவான வெற்றி வாய்ப்பே உள்ளது.
எங்கள் GBR கிளினிக் பெர்ஷலிட்டி சென்டரில் இதைப்போல் பல பேர்களுக்கு கருக்குழாய் பிரச்சினைகளும் அடைப்புகளும் அதி நவீன சிகிச்சை மூலம் நீக்கப்படுவதால் எளிதாக கருத்தரிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலமாக பல தம்பதியர்கள் டெஸ்ட் டியூப் குழந்தைக்காக வந்தவர்கள் சாதாரணமாக கருவுற்று இன்று மகிழ்ச்சியாக உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM