(ஆர்.யசி)
சர்வதேச நாடுகளிடம் கடன்களை பெற்று எமது வெளிநாட்டு கையிருப்பை தக்கவைக்க முடியாது. அவ்வாறு முயற்சிப்பதன் மூலமாக மேலும் மோசமான கடன் பொறிக்குள் சிக்கும் நிலைமையே ஏற்படுமென இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார்.
குறுகியகால சவால்களை எவ்வாறு கையாளப்போகின்றோம், நீண்டகால கடன் நெருக்கடிகளுக்கு எவ்வாறு முகங்கொடுக்க போகின்றோம் என்பன பாரதூரமான பிரச்சினையாகும் என்றார்.
வெளிநாட்டு கையிருப்பு நெருக்கடி மற்றும் சீனாவிடம் புதிதாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள கடன்கள் குறித்து தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய டொலர்கள் இல்லை, குழந்தைகளுக்கான பால்மாவை இறக்குமதி செய்ய வெளிநாட்டு கையிருப்பு இல்லை, துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களை விடுவிக்க டொலர் இல்லை.
நாட்டில் பாரிய அளவில் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இவற்றை சமாளிக்கக்கூடிய வகையில் எமது வெளிநாட்டு கையிருப்பு இல்லை. எம்மிடம் உள்ள நிரை வெளிநாட்டு கையிருப்பு குறித்தே சிந்திக்க வேண்டும். கடன்களை பெற்று வெளிநாட்டு கையிருப்பை வெளிக்காட்ட முடியாது.
எமது கையிருப்பில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களே உள்ளன. இப்போது சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடன்கள் மூலமாக இந்த எண்ணிக்கை 3.1 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.
எனினும் இவ்வாறு வேறு நாடுகளிடம் கடன்களை பெற்றுக்கொண்டு எமது கையிருப்பை தக்கவைக்க முடியாது. பெற்றுக்கொண்ட கடன்களை வட்டியுடன் மீளவும் செலுத்த வேண்டும்.
ஆகவே கடன்களில் வெளிநாட்டு கையிருப்பை தக்கவைக்க நினைப்பது பாதகமான செயற்பாடாகும். இதன்போது குறுகியகால சவால்களை எவ்வாறு கையாளப்போகின்றோம். நீண்டகால கடன் நெருக்கடிகளுக்கு எவ்வாறு முகங்கொடுக்க போகின்றோம் என்பன பாரதூரமான பிரச்சினையாகும்.
அடுத்த ஆண்டில் 6.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை சர்வதேச கடன்களாக செலுத்த வேண்டியுள்ளது. இவற்றில் இரண்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சர்வதேச பிணைமுறிகள் உள்ளடங்குகின்றன.
எனவே இவற்றை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதையோ அல்லது வேறு மாற்று வேலைத்திட்டங்களை கையாள்வதையோ சிந்திக்க வேண்டும். எந்த தீர்மானம் எடுத்தாலும் அவற்றை உடனடியாக எடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM