(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்திற்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிளவினை ஏற்படுத்த எதிர்க்கட்சி முயற்சிக்கிறது. எதிர்க்கட்சியினரின் போலியான பரப்புரைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொள்வதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கிராமத்திற்குச் சென்றால் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கூக்குரல் எழுப்புவர் என்று எதிர்தரப்பினர் தெரிவித்தனர். எனினும் அந்த கருத்துக்கள் பொய்யாக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்றுவோம். ஜனாதிபதியால் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையை பாதுகாப்பற்ற நாடாக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
அரசாங்கத்திற்கு முஸ்லிம் நாடுகள் உதவுவதில்லை என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் பரப்ப முயற்சிக்கின்றன. இதுவே எதிர்க்கட்சிகளின் அரசியல் போக்காகும்.
உலக வங்கி அரசாங்கத்திற்கு உதவவில்லை என்று எண்ணுகின்றனர். வீதி நிர்மாணப்பணிகளுக்காக உலக வங்கி 500 மில்லியன் டொலர் வழங்கியுள்ளது.
முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பிளவை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. எமது அரசாங்கம் எதிர்க்கட்சிகளைப் போன்று மக்களை பிளவுபடுத்தும் அரசாங்கமல்ல.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் அனைத்து இன மக்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் பொய் பரப்புரைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று வடக்கு , கிழக்கு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM