அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுள்ள திருத்தப்பட்ட வற்வரி அதிகரிப்பு சட்டமூலம் நாளை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. கடந்த மாதம் 13 ஆம் திகதி திருத்தபட்ட வற்வரி அதிகரிப்பு சட்டமூலம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையிலேயே நாளை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 11 வீதத்திலிருந்து 15 வீதமாக வற்வரியை அதிகரிக்கும் நோக்கில் வற்வரி சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டவுள்ளது.
ஏற்கனவே வற்வரி அதிகரிப்பு சட்டமூலம் கடந்த மே மாதம் 2 ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வந்தது. எனினும் தேசிய சுதந்திர முன்னணி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் வற்வரி சட்டமூலம் உரிய அரசியல் அமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையிலேயே அரசாங்கம் உரிய விதிமுறைகளை பின்பற்றி புதிய வற்வரி சட்டமூலத்தை தயாரித்து அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றதுடன் தற்போது பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM