இலங்கையர்களால் முழுமையாகத் தயாரிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் மக்களின் பேராதரவுடன் தொடர்ச்சியாகத் திரையிடப்பட்டிருக்கின்ற 'புத்திகெட்ட மனிதரெல்லாம்' என்ற முழுநீளத்திரைப்படம் எதிர்வரும் 31 ஆம் மற்றும் ஜனவரி மாதம் முதலாம், இரண்டாம் திகதிகளில் கொழும்பிலும் திரையிடப்படவுள்ளது.
கிருஷோபனின் தயாரிப்பின்கீழ் ராஜ் சிவராஜின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்மாவட்டத்தின் பல்வேறு திரையரங்குகளிலும் வெளியிடப்பட்டு மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படத்திற்கு பூவன் மதீசன் இசையமைத்திருப்பதுடன் ஒளிப்பதிவாளராக தர்மலிங்கம், கலை இயக்குநராக சரவணன் ஆகியோர் பணியாற்றியிருப்பதுடன் படத்தொகுப்பு அருணால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழில் பெற்ற அமோக வரவேற்பையடுத்து இத்திரைப்படம் இம்மாதம் 31 ஆம் திகதி மற்றும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம், இரண்டாம் திகதிகளில் பாமன்கடை ஈரோஸ் திரையரங்கில் திரையிடப்படவுள்ளது.
சஜிஷ்ணவன் - 077 8199188, அபிஷ்டகன் - 077 0756782, சரவணன் - 076 6077633 ஆகியோரைத் தொடர்புகொண்டு திரைப்படத்தைப் பார்வையிடுவதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளமுடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM