கார்வண்ணன்
நாடு மிகமோசமான பொருளாதாரநெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்ற நிலையில், அடுத்தடுத்த வாரங்களில், பொருளாதாரம்முடங்கிப் போகும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.
இந்தச் சூழலில், சேதன உரவிவகாரத்தில் சீன நிறுவனத்துக்கு, 6.7 மில்லியன் டொலர்கள் இழப்பீட்டைக் கொடுக்கஅரசாங்கம் இணங்கியிருப்பது பலத்த விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது.
எதிர்க்கட்சியில் உள்ளவர்கள்மாத்திரமன்றி, ஆளும்கட்சியில் இருப்பவர்களே அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டைகேள்விக்குட்படுத்துகிறார்கள்.
சேதன உர இறக்குமதி விவகாரத்தில்,சீனாவுக்கும் இலங்கைக்கும் முட்டுப்பாடுகள் ஏற்பட்டிருந்த நிலையில், சீன நிறுவனம்சர்வதேச தலையீட்டைக் கோர நேரிடும் என்று அச்சுறுத்தியதும், அரசாங்கம் பணிந்துபோயிருக்கிறது.
சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவேசீன நிறுவனத்துக்கு இழப்பீட்டுத் தொகையை செலுத்த அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக,விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறியிருக்கிறார்.
ஆனால், சீன நிறுவனத்திடம் இருந்துதரகுப்பணத்தைப் பெறுவதற்காகவே, இந்த இழப்பீட்டை செலுத்துவதற்கு இணங்கியுள்ளார்கள்என்று அரசாங்கத்தில் உள்ள இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியிருக்கிறார்.
மைத்திரிபால சிறிசேனவும் வேறு பலபாராளுமன்ற உறுப்பினர்களும், சீன நிறுவனத்துக்கு இழப்பீடு வழங்க எடுக்கப்பட்டமுடிவைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-12-26#page-6
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM