(எம்.நியூட்டன்)
தமிழ் கட்சிகளிற்கு மட்டும் வாக்களிப்போமென தெரிவித்து வடகிழக்கு தமிழ் மக்கள் வெறுமனே தரகர்களை மட்டுமே உருவாக்கியிருக்கிறார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான சந்திரசேகரன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில்,
கடந்த தேர்தல்களில் ஒரு சாரார் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வாக்களித்தனர். அவரோ அதனை ஜனாதிபதி கோத்தபாயவிற்கு தாரைவார்த்து விற்றுவிட்டார்.
இன்னொரு சாரார் அங்கயன் இராமநாதனிற்கு வாக்களித்தனர். அவரும் அதனை ஜனாதிபதி கோத்தபாயவிற்கு தாரை வார்த்து விற்றுவிட்டார்.
இன்னும் சிலரோ கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரனிற்கு வாக்களித்தனர். அவர் ரணிலுக்கும் தற்போது சஜித்திற்கும் அதனை விற்றுவருகின்றார்.
இவ்வாறு தரகர்கள்,புறோக்கர்கள் ஊடாக தெற்கிற்கு தாரை வார்ப்பதை விடுத்து தற்போது தெற்கில் பலம் வாய்ந்த மாற்று சக்தியாக பரிணமித்துள்ள தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்வதன் மூலம் தமிழ் மக்கள் நல்லதொரு விடிவை பெறமுடியுமென தற்போதைய ஜனாதிபதி கோட்டாபாய மக்களது ஆதரவை மிகவேகமாக இழந்துவருகின்றார். அவர் அவ்வாறு மக்கள் ஆதரவை இழக்கின்ற போது மறுபுறம் தனது ஆதரவை பலப்படுத்த வேண்டிய சஜித் பிறேமதாசாவோ தானும் அதே போன்று வீழ்ந்து கிடக்கின்றார்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியே தற்பேர்து தன்னை பலப்படுத்தி மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துவருகின்றது.
சர்வதேச நாட்டு தூதர்கள் மற்றும் இராஜதந்திரிகள் தற்போது படையெடுத்து வந்து தேசிய மக்கள் சக்தியை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை அவர்கள் புரிந்து கொண்டுள்ளமை தெரிகிறது.
இதனிடையே அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவை ஜனாதிபதி முதல் பொதுஜனபெரமுனவை சேர்ந்த அனைவரும் வெளியே போகச்சொல்கின்றனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM