( எம்.எப்.எம்.பஸீர்)
நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பிலான அனர்த்தங்கள் பதிவாகும் நிலையில், அச் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுக்கவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அவதானத்துக்கு இன்று கொண்டுவரப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு விடயத்தில் தொடர் அனர்த்தங்கள் பதிவாகும் நிலையில் அது தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம், ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன சார்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு இரு முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.
அந்த முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் இன்று (28) இலங்கை மனித உரிமைகள் விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போதே முறைப்பாட்டாளர்கள் இந்த விடயத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவில் பதிவு செய்தனர்.
இதன்போது முறைப்பாட்டாளர் தரப்பில் ஆஜராகியிருந்த ஊடகவியலாளர்கள், எரிவாயு சிலிண்டர்கள் சார் சம்பவங்கள் காரணமாக 7 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும், அது தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை குறிப்பிடுவதக சுட்டிக்காட்டினர்.
இந் நிலையில் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, இதுவரையில் இவ்வருடம் பதிவான ஒவ்வொரு எரிவாயு சிலிண்டர் சார் சம்பவங்கள் தொடர்பிலான தகவல்களையும் உள்ளடக்கிய சிறப்பு அறிக்கை ஒன்றினை சமர்பிக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM