மட்டக்களப்பு நகர் பார்வீதியில் வேலைக்காரப் பெண்ணால் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட எனது அம்மாவின் படுகொலைக்கு நீதி வேண்டும் என தயாவதியின் மகள் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்கு உயிரிழந்த தயாவதியின் கணவர் மற்றும் மகள் நேற்று திங்கட்கிழமை (27) நீதிமன்றத்தில் வாக்கு மூலம் பதிவு செய்ய சென்று திரும்பியபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தனர்.
நான் எல்லா பட்டங்களும் அம்மாவுக்கு சேரவேண்டும் என படித்தேன் ஆனால் இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை. இந்த சம்பவம் ஊடகம் மூலம் வெளிவந்தது எனவே நீதி கிடைக்கும் என நம்புகின்றோம்.
இது ஒரு படிப்பினை எனவே அப்படியான சம்பவங்களை ஆறவிடாமல் அந்த இடத்திலேயே தண்டனை வழங்கினால் மக்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்கும். குற்றவாளிகளுக்கும் ஒரு பயம் வரும்.
குற்றத்தை ஒப்புக் கொண்ட பின்னர் அந்த இடத்திலே தண்டனையை வழங்குங்கள் அப்போது தான் நியாயம் கிடைக்கும்.
தாய் இல்லாமல் ஒரே ஒரு பெண்பிள்ளை படும் வேதனை ஒருவருக்கும் விளங்காது. நான் உயிருடன் இருப்பது அப்பாவுக்காக. அதேவேளை பல்கலைக்கழகத்துக்கு படிக்கபோக முடியாது உள்ளது. என்ன நடக்கும் என்று பயம் ஏற்பட்டுள்ளது என்பதால். போகமுடியாமல் உள்ளதாக தயாவதியின் மகள் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM