(எம்.மனோசித்ரா)
இலங்கைக்கான மலேஷியாவின் பிரதி உயர்ஸ்தானிகராக 2009 - 2011 காலப்பகுதியில் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் உதய பெரேரா அமெரிக்காவினால் போர்க்குற்ற சந்தேகநபராக அறிவிக்கப்பட்டுள்ளதோடு , அந்நாட்டுக்குள் நுழைவதற்கும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் உதய பெரேரா தனது குடும்பத்தாருடன் கடந்த 5 ஆம் திகதி அமெரிக்கா செல்வதற்காக பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்ற போது , அவருக்கு இவ்வாறான தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்கால நடவடிக்கைகள் செயற்பாட்டு பணிப்பாளராக கடமையாற்றியிருந்த அவர் , 2019 இல் வழங்கப்பட்ட ஐந்தாண்டு பல்நுழைவு வீசாவினைப் பெற்றிருந்தாலும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2020 பெப்ரவரி 14 ஆம் திகதி இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இவ்வாறு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது.
அது மாத்திரமின்றி கடற்படை அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரி சுனில் ரத்னாயக்க ஆகியோருக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM