(நெவில் அன்தனி)
பங்களாதேஷில் நடைபெற்றுவரும் மத்திய ஆசிய சவால் கிண்ண கரப்பந்தாட்டத்தின் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை தகுதிபெற்றுள்ளது.
இன்று நடைபெறவுள்ள ஆடவருக்கான இறுதிப் போட்டியில் பங்களாதேஷை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.
மாலைதீவுகளுக்கு எதிராக திங்கட்கிழமை இரவு நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் 3 - 1 என்ற செட்கள் அடிப்படையில் வெற்றிகொண்ட இலங்கை தோல்வி அடையாத அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.
எவ்வாறாயினும் மாலைதீவுகளுடனான போட்டியில் இலங்கை கடும் சவாலை எதிர்கொண்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
முதலாவது செட்டில் 25 - 19 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஓரளவு இலகுவாக வெற்றிபெற்ற இலங்கை, 2 ஆவது செட்டில் கடும் போட்டிக்கு மத்தியில் 24 - 26 என தோல்வி அடைந்தது.
3 ஆவது செட்டில் மீண்டும் கடும் சவாலை எதிர்கொண்ட இலங்கை ஒருவாறு 25 - 23 என வெற்றிபெற்றது.
4ஆவது செட்டில் நிதானத்தையும் சிறந்த நுட்பத்தையும் கடைப்பிடித்து விளையாடிய இலங்கை 25 - 19 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மாலைதீவுகளுடனான போட்டியில் மஹேல இந்தீவர பண்டார ஆட்டநாயகனாகத் தெரிவானார்.
5 நாடுகள் பங்குபற்றிய ஆடவர் பிரிவுக்கான கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் (3 - 0), நேபாளம் (3 - 1), பங்களாதேஷ் (3 - 1) ஆகியவற்றை தனது முதல் 3 போட்டிகளில் இலங்கை வெற்றிகொண்டிருந்தது.
இது இவ்வாறிருக்க, மகளிர் பிரிவில் பங்குபற்றிய இலங்கை, 3ஆம், 4ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நிரல்படுத்தல் போட்டியில் கிர்கிஸ்தானை தற்போது இலங்கை எதிர்த்தாடிவருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM