(இராஜதுரை ஹஷான்)
புகையிரத திணைக்கள பொது முகாமையாளருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து புகையிரத போக்குவரத்து சேவையில் முன்னெடுக்கப்படும் எரிபொருள் விநியோகம், பிறிமா மா விநியோகம்,ஹோல்சிம் நிறுவனத்திற்கான சுண்ணாம்பு விநியோகம் ஆகிய சேவைகளில் இருந்து விலகியுள்ளோம்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை பொது பயணிகளை நெருக்கடிக்குள்ளாக்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்படுவோம் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
மருதானையில் உள்ள புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் பதவி உயர்வு, இடமாற்றம்,சேவையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 23ஆம் திகதி முதல் புகையிரத பொதி விநியோக சேவை, சாதாரன புகையிரத பயணச்சீட்டு விநியோகம் ஆகிய சேவைகளில் இருந்து விலகியுள்ளார்கள்.
புகையிரத திணைக்கள மட்டத்தில் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்கள்.
நியாயமற்ற கோரிக்கையை முன்வைத்து ஏற்கெனவே நட்டமடைந்துள்ள இலங்கை புகையிரத திணைக்களத்தை மேலும் நட்டமடைய செய்வது அவர்களின் பிரதான நோக்கமாக உள்ளது என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM