(இராஜதுரை ஹஷான்)
தேயிலை பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கையின் ஏற்றுமதி பொருளாதாரம் முன்னேற்றமடைந்தது.
இருப்பினும் இரசாயன உரம் பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்யப்பட்ட காரணத்தினால் கடந்த ஏழு மாத காலத்தில் தேயிலை பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
விரைவான தீர்மானங்களை செயற்படுத்தாவிடின் தேயிலை பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடையும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க தெரிவித்தார்.
பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பதிரன தலைமையில் திங்கட்கிழமை (27) அமைச்சின் காரியாலயத்தில் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
காலநிலை மற்றும் பொது காரணிகளினால் மாத்திரம் இவ்வருடத்தில் தேயிலை விளைச்சல் ஒப்பீட்டளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் எதிர்வரும் பெப்ரவரி மாத காலப்பகுதியில் பெரும் தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும்.தேயிலை பயிர்ச்செய்கைக்கு தற்போது இரசாயன உரம் கிடைக்காவிடின் தேயிலை பயிர்ச்செய்கை முழுமையாக அழிவடையும்.
100 கிலோகிராம் தேயிலை கொழுந்திற்கு 40 கிலோகிராம் உரம் வழங்க தீர்மானித்துள்ளமை சிறந்தது. இருப்பினும் தேயிலை பயிர்ச்செய்கையில் ஈடுப்படும் மாத்தறை உள்ளிட்ட பகுதிகளில் 100 கிலோகிராம் தேயிலை கொழுந்திற்கு 20 கிலோகிராம் உரம் மாத்திரம் கிடைக்கப் பெறுகிறது.
ஒரு உர மூட்டையின் விலை 6000ஆயிரம் தொடக்கம் 8000ஆயிரம் வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. சடுதியான விலையேற்றத்தால் நடுத்தர விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகையால் 50 கிலோகிராம் உர மூட்டைக்கு பதிலாக 25 கிலோகிராம் உர மூட்டை வழங்கும் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.அப்போது குறைந்த விலைக்கு உரம் பெற்றுக் கொள்ள முடியும்.
பயிர்ச்செய்கையாளர்கள் 1 கிலோகிராம் தேயிலை கொழுந்தினை பெற்றுக் கொள்வதற்கு 115 ரூபா செலவு செய்ய வேண்டியுள்ளது. இருப்பினும் ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்தின் ஊடாக 90 ரூபா அல்லது 100 ரூபாவே அவர்களுக்கு கிடைக்கப் பெறுகிறது. ஆகவே தேயிலை கொழுந்திற்காக கிடைக்கப் பெறும் தொகையினையும் அதிகரிக்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM