கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைதான மேலும் இரண்டு சந்தேகநபர்களை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதிபதி பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (27) குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் கிண்ணியா பொலிஸார் ஆஜர்படுத்தியபோது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்வர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 35 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி கிண்ணியா குறிஞ்சாக் கேணி பகுதியில் மிதகு படகு விபத்து இடம்பெற்றபோது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM