(எம்.மனோசித்ரா)
திக்வெல்ல பிரதேசத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக குஷ் , கொக்கைன் மற்றும் போதை மாத்திரைகளைக் கொண்டு சென்ற நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை காலை அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு காரொன்றில் பயணித்துக் கொண்டிருந்த பெண்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிவேக நெடுஞ்சாலை கண்காணிப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த மிரிஹான பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணொருவரும் , களுபோவில, கடுவாவல மற்றும் பேராதனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30, 31 மற்றும் 32 வயதுகளையுடைய பெண்கள் உள்ளடங்குகின்றனர்.
பாடசாலை நண்பிகளான இந்த பெண்கள் நால்வரும் திக்வெல்லையில் வசிக்கும் பிரிதொரு நண்பியின் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பிலிருந்து சென்று கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் போது அதிவேக நெடுஞ்சாலை நுழைவுப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் , சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த சொகுசு காரை பரிசோதித்துள்ளார்.
இதன் போதே போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளில் குஷ் மற்றும் கொக்கைன் போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM