புசல்லாவையில் முச்சக்கரவண்டி - கார் விபத்து : ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்

Published By: Digital Desk 4

26 Dec, 2021 | 05:09 PM
image

நுவரெலியாவிலிருந்து கண்டி நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து புசல்லாவை பகுதியில் நிறுத்தி வைத்திருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்ததோடு, பெண் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் புஸ்ஸலாவ சரஸ்வதி மத்திய கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருடன் குறித்த முச்சக்கரவண்டி மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 26.12.2021 இன்று காலை 9.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்ததோடு, அதில் பயணித்த பெண் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய டீ.எம்.ருபாநந்த என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பில் புஸ்ஸலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொன்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58