(எம்.மனோசித்ரா)
இலங்கை அடுத்த ஆண்டு பாரியதொரு நிதி நெருக்கடியை எதிர்கொள்ளக் கூடிய அபாயம் காணப்படுவதாக மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுனர் டபிள்யு.ஏ.விஜேவர்தன எச்சரித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றினை இவ்வாறு எச்சரித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
இலங்கையிலுள்ள வங்கிகளில் காணப்படும் அந்நிய செலாவணி இலகுவில் பெற்றுக் கொள்ளக் கூடிய ரூபா அல்ல.
மத்திய வங்கியின் தரவுகளுக்கமைய இம்மாதம் 24 ஆம் திகதியன்று இலங்கை வங்கி கட்டமைப்பில் 455 பில்லியன் ரூபா பற்றாக்குறை நிலவுகிறது.
இவ்வாறான நிலையில் தற்போது காணப்படும் நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு மத்திய வங்கியினால் ஏனைய வணிக வங்கிகளுக்கு 6 சதவீதம் வட்டி அடிப்படையில் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மாற்று விகிதங்கள் மற்றும் வட்டி விகிதங்களை செயற்கையாக கட்டுப்படுத்துவதே இந்த நிலைக்கு காரணமாகும். நாட்டில் ஏற்பட்டுள்ள பண வீக்கமானது மத்திய வங்கியின் கொள்கை நிலைப்பாட்டை தடுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்தியில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு பணம் அனுப்புவதற்கான 10 ரூபா ஊக்குவிப்பு கொடுப்பனவை அடுத்த வருடம் ஜனவரி 31 ஆம் திகதி வரை நீடிக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM