வடிகானிலிருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 3

25 Dec, 2021 | 04:06 PM
image

புத்தளம்,  கரம்பை - உடப்பு பிரதான வீதியின் நாயக்கர்சேனை பகுதியில் உள்ள வடிகானுக்குள் இருந்து இன்று (25) காலை இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கரம்பை நாயக்கர்சேனைப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் உள்ள வீதியோர வடிகானுக்குள் மோட்டார் சைக்கிளுடன் சடலம் ஒன்று கிடப்பதாக தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த நுரைச்சோலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

குறித்த பகுதியில் வெள்ளநீர் வழிந்தோடுவதற்காக வீதியோரத்தில் தோண்டப்பட்டிருந்த வடிகானுக்குள் இளம் குடும்பஸ்தர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீழ்ந்ததில் அவர் உயிரிழந்திருக்காலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (24) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு இன்று சனிக்கிழமை காலை விஜயம் செய்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான், சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, இது விபத்தில்லை என்றும் கொலையாக இருக்கலாம் எனவும் உயிரிழந்தவரின் தாயும், குடும்பத்தினரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், இந்த சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40