நாசரேத்து கிராமத்தில் பெத்தலகேம் எனும் மிகவும் ஏழ்மையான நகரில் மரியாள், ஜோசப் இற்கு ஜேசு கிறிஸ்து பிறந்தார். அதுவே உலகெங்கிலும் வாழும் கிறிஸ்தவர்களின் நத்தார் பண்டிகையாக விளங்குகின்றது.
அந்தவகையில், நாட்டில் பல்வேறு பகுதியில் நத்தார் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றிலிருந்து இலங்கை மற்றும் , உலக நாடுகளிலுள்ள மக்கள் பாதுகாப்பு பெற வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் குணமடைய வேண்டும் எனவும் பிராத்தனைகளும் செய்யப்பட்டது.
புத்தளம்
புத்தளம் மாவட்டத்தில் பழமை வாய்ந்த முந்தல் - கட்டைக்காடு புனித சவோரியார் தேவாலயத்தில் நள்ளிரவு ஆராதனையும் திருப்பலி பூஜையும் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
புத்தளம் சாந்த மரியா ஆலயத்தில் இன்று நள்ளிரவு 12 மணியளவில் கிறிஸ்துமஸ் ஆராதனைகள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணம்
யாழ் மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை ஆலயத்தில் யாழ் மறை மாவட்ட ஆயர் பேரருட் திரு ஜஸ்டின் ஞானபிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டு திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அட்டன்
அட்டன் திருச்சிலுவை தேவலாயத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை நியூமன் பீரிஸ் அவர்களால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM