(இராஜதுரை ஹஷான்)
போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு இன்று தீர்வு வழங்காவிடின் நாளை நள்ளிரவு முதல் முழுமையான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
பதவி உயர்வு,சேவையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் கடந்த இரண்டு நாட்களாக புகையிரத பொதி சேவை விநியோகம் புகையிரத சாதாரண பயணச்சீட்டு விநியோகம் ஆகிய கடமைகளில் இருந்து விலகியுள்ளார்கள்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து போக்குவரத்து துறை அமைச்சின் செயலாளர் தலைமையில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சின் காரியாலயத்தில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.புகையிரத திணைக்களத்தின் பொதுமுகாமையாளர தம்மிக ஜயசுந்தர,புகையிரத நிலைய பொறுத்திகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
இப்பேச்சுவார்த்தையினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வினை புகையிரத திணைக்களத்துடன் ஒன்றினைந்து பேச்சுவார்த்தை ஊடாக எடுத்துக் கொள்ள முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து தற்போது தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளோம்.
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகளின் பதவி உயர்வு,இடமாற்றம் ஆகிய விடயங்களில் புகையிரத திணைக்களம் முறையாக செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு பொது பயணிகளின் நலனை முன்னிட்டு விசேட புகையிரத சேவையினை புகையிரத திணைக்களம் இதுவரையில் முன்னெடுக்கவில்லை.
பொது மக்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு சாதாரன புகையிரத பற்றுச்சீட்டு விநியோகத்தில் இருந்து விலகியுள்ளோம். இதனால் ஏற்படும் நிதி நெருக்கடிக்கு புகையிரத திணைக்களம் பொறுப்பு கூற வேண்டும். முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க புகையிரத திணைக்களம் இணக்கம் தெரிவிக்காத காரணத்தினால் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல தீர்மானித்துள்ளோம்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு இன்று தீர்வு பெற்றுக் கொடுக்காவிடின் நாளை நள்ளிரவு முதல் முழுமையான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM