(ஆர்.யசி)
நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக எந்தவித காரணமும் இல்லாது ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க முடியாது.
ஆகவே பாராளுமன்றத்தை ஒத்திவைத்தது ஏன் என்பதை ஜனாதிபதியோ அல்லது அமைச்சரவை ஊடகப்பேச்சாளரோ பிரதமரோ தெளிவுபடுத்த வேண்டும் என ஆளுங்கட்சி சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இக்கட்டான சூழ்நிலையில் ஜனாதிபதி அவசரப்பட்டு பாராளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டார் என்பதுடன் இது ஜனநாயகத்திற்கு முரணான செயற்பாடென தாம் கருதுவதாகவும் அவர் கூறினார்.
நாட்டின் நிதி நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில் ஜனாதிபதியினால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
சகல விதத்திலும் நாட்டில் பிரச்சினைகள் உருப்பெற்றுக்கொண்டுள்ள நிலையில் பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளமை மிக மோசமான தீர்மானமாகும்.
அதிகாரத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டால் பாராளுமன்றத்தை ஒத்திவைக்க முடியும். இப்போது அவ்வாறான அவசியம் ஒன்று இல்லை.
எனவே தற்போது பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததன் மூலம் ஜனாதிபதி அவசரப்பட்டு தீர்மானம் எடுத்துவிட்டார் என்பது மாத்திரமன்றி இந்த செயற்பாடு ஜனநாயகத்திற்கு முரணானதாகவே அமைந்துள்ளது என நான் கருதுகின்றேன்.
அதேபோல் அரசாங்கத்திற்கு இது நல்ல பயணமாக அமையாது என்பதையும் எச்சரிக்கின்றேன். அதுமட்டுமல்ல பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததற்கான காரணம் என்ன என்பதை ஜனாதிபதியோ அல்லது அமைச்சரவை ஊடகப்பேச்சாளரோ பிரதமரோ தெளிவுபடுத்த வேண்டும்.
ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக அவ்வாறு பாராளுமன்றத்தில் கலைக்க முடியாது. அதற்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும். அதனை தெளிவுபடுத்த வேண்டியது அரசாங்க தலைமைகளின் கடமையாகும்.
மேலும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுகின்றது என்றால் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய பிரதமர் முறைமையை உருவாக வேண்டியது அவசியமாகும்.
இப்போதும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையுடன் அவசியமான பல துறைகள் முடக்கப்பட்டுள்ளன. இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவிற்கு எதிராக நாம் முன்வைக்கும் விமர்சனம் அல்ல, நிறைவேற்று ஜனாதிபதிகள் சகலரும் இந்த தவறை செய்துள்ளனர்.
நிறைவேற்று அதிகாரம் நாட்டில் ஜனநாயகத்தை மீறிய தனி அரசாங்கமொன்ரையே கொண்டு நடத்திச்செல்லும். இதுவும் காலாகாலமாக இடம்பெற்று வருகின்ற தவறு என்றே நாம் கருதுகின்றோம்.
ஒரு குழுவிற்கு ஆட்சியை கொடுத்து ஜனநாயகத்தை நாசமாக்க முடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தியதன் விளைவாகவே இன்று நாம் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். எனவே இதில் உடனடியாக மாற்றங்களை செய்தாக வேண்டியுள்ளது.
ஆகவே புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் வேளையில் முதலில் பாராளுமன்றத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
நாளுக்கு நாள் நாம் பின்னோக்கி செல்ல முடியாது, ஒரு தரப்பை சுற்றி அரசாங்கத்தை உருவாக்க முடியாது, எனவே உடனடியாக மறுசீரமைப்பு அவசியம் என்பதே எமது நிலைப்பாடு.
அதேபோல் இப்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் அடுத்த கட்டத்தில் அரசியலில் பல முக்கிய மாற்றங்கள் ஏற்படும் சூழலே காணப்படுகின்றது. ஆனால் இது ஆரோக்கியமான விதத்தில் அமையுமா அல்லது மோசமான மாற்றமாக அமையுமா என்பது அவதானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்பதை மட்டுமே இப்போது எம்மால் கூற முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM