(நா.தனுஜா)
உரத்தட்டுப்பாடு காரணமாக விவசாய உற்பத்திகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி மரக்கறிகளின் சந்தை விலைகளில் மிகையானதும் சடுதியானதுமான அதிகரிப்பு ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளது.
குறிப்பாக புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாரஹென்பிட்டி சந்தைகளில் போஞ்சி, கரட், தக்காளி, கத்தரி, பூசணி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், உருளைக்கிழக்கு உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகள் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இம் மாதம் 50 - 250 ரூபாவினால் அதிகரித்துள்ளன.
அரசாங்கத்தினால் கடந்த ஏப்ரல் மாதம் இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, நாட்டின் தேசிய உணவு உற்பத்திக்கு அவசியமான உரத்திற்குப் பாரிய பற்றாக்குறை ஏற்பட்டது.
உள்நாட்டிலேயே சேதன உரத்தைத் தயாரிக்கப்போவதாக அரசாங்கம் கூறியபோதிலும், அதற்குரிய முறையான செயற்திட்டங்கள் எவையும் வகுக்கப்படவில்லை.
நாடளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் உரப்பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் தற்போதுவரை உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாததன் காரணமாக விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அதன் விளைவாக நாட்டின் தேசிய உணவு உற்பத்தி வீழ்ச்சியடைந்திருப்பதுடன் சந்தையில் மரக்கறிகளின் விலைகள் பெருமளவால் அதிகரித்துள்ளன.
அதன்படி புறக்கோட்டை, தம்புள்ளை மற்றும் நாரஹென்பிட்டி சந்தைகளில் கடந்த மாதம் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில் இம்மாதம் அவற்றின் விலைகள் 50 - 250 ரூபாவினால் அதிகரித்திருக்கின்றன.
குறிப்பாக புறக்கோட்டை சந்தையில் மரக்கறிகளின் சில்லறை விலைகளைப் பொறுத்தமட்டில் கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதி ஒரு கிலோகிராம் போஞ்சி, கரட், தக்காளி, கத்தரி, பூசணி, புடலங்காய், பச்சைமிளகாய், பெரிய வெங்காயம், உருளைக்கிழக்கு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றின் விலைகள் முறையே 400 ரூபா, 350 ரூபா, 300 ரூபா, 250 ரூபா, 75 ரூபா, 250 ரூபா, 200 ரூபா, 165 ரூபா, 220 ரூபா, 550 ரூபாவாகக் காணப்பட்டபோதிலும் இம்மாதம் 22 ஆம் திகதி (நேற்று ) அவற்றின் விலைகள் முறையே 475 ரூபா, 425 ரூபா, 330 ரூபா, 390 ரூபா, 80 ரூபா, 300 ரூபா, 750 ரூபா, 238 ரூபா, 275 ரூபா, 790 ரூபாவாக அதிகரித்துள்ளன.
அதேபோன்று தம்புள்ளை சந்தையில் மரக்கறிகளின் சில்லறை விலைகளை ஆராய்ந்து பார்க்குமிடத்து கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதி ஒரு கிலோகிராம் போஞ்சி, கரட், தக்காளி, கத்தரி, பூசணி, புடலங்காய், பச்சைமிளகாய், பெரிய வெங்காயம், உருளைக்கிழக்கு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றின் விலைகள் முறையே 350 ரூபா, 315 ரூபா, 315 ரூபா, 245 ரூபா, 58 ரூபா, 255 ரூபா, 185 ரூபா, 168 ரூபா, 208 ரூபா, 528 ரூபாவாகக் காணப்பட்டபோதிலும் இம்மாதம் 22 ஆம் திகதி (நேற்று முன்தினம்) அவற்றின் விலைகள் முறையே 375 ரூபா, 415 ரூபா, 320 ரூபா, 295 ரூபா, 95 ரூபா, 275 ரூபா, 715 ரூபா, 235 ரூபா, 258 ரூபா, 548 ரூபாவாக அதிகரித்துள்ளன.
இம்மரக்கறிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விலைகளில் மிதமிஞ்சிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.
புறக்கோட்டை சந்தையில் ஆறு மாதங்களுக்கு முன்னர் கடந்த ஜுன் 22 ஆம் திகதி மரக்கறிகளின் சில்லறை விற்பனை விலைகளை நோக்குகையில் ஒருகிலோ போஞ்சி 320 ரூபா, கரட் 180 ரூபா, தக்காளி 140 ரூபா, கத்தரி 160 ரூபா, பூசணி 90 ரூபா, புடலங்காய் 180 ரூபா, பச்சை மிளகாய் 300 ரூபா, பெரிய வெங்காயம் 95 ரூபா, உருளைக்கிழங்கு 140 ரூபா மற்றும் காய்ந்த மிளகாய் 530 ரூபாவாகப் பதிவாகியிருந்தன.
இவ்வாறானதொரு பின்னணியில் மரக்கறிகள் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் விலையுயர்வினால் கடந்த அக்டோபர் மாதத்தில் 11.7 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப்பணவீக்கம் கடந்த நவம்பர் மாதத்தில் 16.9 சதவீதமாக உயர்வடைந்ததுடன் அதன் விளைவாக கடந்த மாதத்திற்கான தேசிய பணவீக்கம் 11.1 சதவீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM