(இராஜதுரை ஹஷான்)
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் இன்று நள்ளிரவு முதல் புகையிரத பயண சீட்டு விநியோகிக்கும் கடமையில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளனர்.
புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு தீர்வை வழங்காவிடின் டிசம்பர் 26 முழுமையான பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பற்ற புகையிரத சமிஞ்சை தொடர்பில் பலமுறை வலியுறுத்தியுள்ளோம். பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுவதை விடுத்து மாற்று திட்டங்களை புகையிரத திணைக்களம் செயற்படுத்துகிறது.
புகையிரத திணைக்களத்தின் பொறுப்பற்ற செயற்படுத்துவதை கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட தீர்மானித்துள்ளோம்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட புகையிரத சேவையினை செயற்படுத்துமாறு புகையிரத திணைக்களத்திடம் பலமுறை வலியுறுத்தினோம். இதுவரையில் எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
பயணிகளுக்காக விசேட புகையிர சேவையினை அறிமுகப்படுத்தும் வரையில் பயண சீட்டு விநியோக கடமையில் ஈடுப்பட போவதில்லை. அத்துடன் இதுவரையில் முன்னைக்கப்பட்டுள்ள பல கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் டிசம்பர் 26 முழுமையான பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவோம் என்றும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM