(இராஜதுரை ஹஷான்)
அத்தியாவசிய பொருட்களின் விலையினை அதிகரிப்பதை தவிர வேறு மாற்று வழி ஏதும் கிடையாது.
எதிர்வரும் நாட்களிலும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க கூடும். தேசிய பொருளாதாரத்தை பாதுகாக்க நாட்டு மக்களும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
குருநாகல் பிரதேசத்தில் இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எரிபொருள் விலையேற்றம் தற்போது எதிர்தரப்பினரது பிரதான அரசியல் பிரசாரமாக காணப்படுகிறது. உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட போதும் மக்களுக்கு நிவாரண அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டது.
எரிபொருளின் விலையை அதிகரிப்பதை தவிர மாற்று வழி இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டது.
அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிப்பதை தவிர மாற்று வழிமுறைகள் ஏதும் தற்போது கிடையாது. எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் அதிகரிக்க கூடும்.
அரசாங்கம் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மக்களின் வரி பணத்தின் ஊடாக அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகிறது. நாடு பொருளாதார மட்டத்தில் வீழ்ச்சியடைவதாக எதிர் தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றதாகும்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினால் ஆட்சி மாற்றம் ஏற்படாது.
எதிர்வரும் காலங்களில் அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்களை சிறந்த முறையில் தற்போது வகுத்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM