(எம்.மனோசித்ரா)
அத்துருகிரிய பிரதேசத்தில் காசோலைகளை கொள்ளையிட்டு அதன் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் காசோலை மோசடி தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய மோட்டார் சைக்கிளின் ஆசனத்தில் கீழ் காணப்படும் பகுதியிலிருந்து காசோலைகளைக் கொள்ளையிட்டு , அவற்றை வங்கியில் கையளித்து குறித்த சந்தேகநபர்கள் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இந்த முறையில் 470 000 பெறுமதியுடைய காசோலைகள் கொள்ளையடிக்கப்பட்டு, அதன் மூலம் 470 000 ரூபா பணமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து 403 000 பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் 32 மற்றும் 38 வயதுகளையுடைய அத்துருகிரிய மற்றும் ஹோமாகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். அத்துருகிரிய பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM