எழுத்தாளர் அ.வா. முஹ்ஸீனின் வரலாற்று சிறப்புமிகு நூல் அறிமுக நிகழ்வு

Published By: Digital Desk 2

23 Dec, 2021 | 01:12 PM
image

அ . அச்சுதன்


அறிஞர் சித்திலெப்பை  எழுதிய அசன்பேயுடைய கதை எனும் நாவலின் பகுப்பாய்வு நூலாக பிரபல எழுத்தாளர் அ.வா.முஹ்ஸீன் (ஓய்வு நிலை ஆசிரியர்) எழுதிய 'அசன்பேயுடைய கதை - ஓர் மீள் வாசிப்பு' வரலாற்று சிறப்புமிகு நூல் அறிமுக நிகழ்வு மூதூர் பிரதேச சபை கேட்போர் மண்டபத்தில்  இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளரும்,மூதூர் அனர்த்த உதவி  அமைப்பின் தலைவரும், எழுத்தாளருமான எம்.சீ.எம்.ஷெரீப் கலந்து கொண்டார்.


குறித்த நிகழ்விற்கு தலைமையையேற்று தலைமையுரையை ஓய்வு நிலை அதிபர் கவிஞர். மீரா முஹைதீன் வழங்கினார். நூல் பற்றிய அறிமுகத்தை இளம் எழுத்தாளர் ஜே.எம்.இஹ்ஷான் வழங்கினார்.

இறுதியாக நிகழ்வு ஏற்புரையை நூலின் ஆசிரியர் அ.வா.முஹ்ஸீன்  நிகழ்த்தியிருந்தார்.


இந் நிகழ்வில் மூதூரின் மூத்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சமூக பிரதிநிதிகள் மற்றும் நூலாசிரியரின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டதோடு சிறப்பு பிரதிகளையும் பெற்றுக்கொண்டனர்.



முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08
news-image

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை...

2024-04-09 14:10:46
news-image

USKU அமைப்பின் சர்வதேச பொதுக்கூட்டம் 2024

2024-04-09 12:56:17
news-image

லிந்துலை அவரபத்தனை கீழ்பிரிவு அருள்மிகு ஸ்ரீ...

2024-04-09 12:43:52