மட்டு உப்போடை பகுதி ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது 

Published By: Digital Desk 4

23 Dec, 2021 | 11:46 AM
image

மட்டக்களப்பு உப்போடை ஆற்றில் உருக்குலைந்த நிலையில் நேற்று மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த சடலம் மட்டக்களப்பு மோகோந்திரன் வீதியைச் சேர்ந்த 37 வயதுடைய தோமஸ் காந்தமூர்த்தி செந்தூரன் என அவரது மனைவியினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமை ஒருவர் கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிஸார் அப்பகுதியில் தேடினர். 

இந்நிலையில் அன்றைய தினம் காந்தமூர்த்தி செந்தூரன்  வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போயுள்ளார் என அவரது மனைவி, உறவினர் தேடிவந்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று உப்போடை பகுதி ஆற்றில் கரையொதிங்கிய சடலத்தை அவரது மனைவி பார்த்து அது தனது கணவர் என அடையாளம் காட்டியுள்ளனர்.

இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17