மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்தில் காணிப்பிரிவில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர் ஒருவர் அரச காணி ஒன்றை பெற்று தருவதாக 2 இலட்சம் ரூபா இலஞ்சமாக வாங்கியபோது அவரை கொழும்பு இலஞ்ச உழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த உத்தியோகத்தரை எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.
ஆரையம்பதியைச் சேர்ந்த குறித்த உத்தியோகத்தர் நீண்ட காலமாக காணிபத்திரம் தொடர்பாக ஆசிரியர்கள் உட்பட பலரிடம் இலஞ்சம் வாங்கி வந்துள்ளதாகவும்.
இந்த நிலையில் ஒருவருக்கு அரச காணி ஒன்றை பெற்றுதருவதாக ஒருவரிடம் 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபர் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிடம் முறையிட்டதையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான இன்று பகல் செங்கலடி பிரதேச செயலக காணிப்பிரிவில் வைத்து அவர் கேட்ட 2 இலட்சம் ரூபாவை இலஞ்சாமாக கொடுத்தபோது அங்கு இருந்த இலஞ்ச உழல் ஒழிப்பு பிரிவினர் குறித்த உத்தியோகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM