அரச காணி பெற்றுத்தருவதாக இலஞ்சம் பெற்ற காணிப்பிரிவு உத்தியோகத்தர் கைது 

Published By: Digital Desk 4

22 Dec, 2021 | 09:26 PM
image

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகத்தில் காணிப்பிரிவில் கடமையாற்றி வந்த உத்தியோகத்தர் ஒருவர் அரச காணி ஒன்றை பெற்று தருவதாக 2 இலட்சம் ரூபா இலஞ்சமாக வாங்கியபோது அவரை கொழும்பு இலஞ்ச உழல் ஒழிப்பு பிரிவினரால் இன்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

புதையல் அகழ்வில் ஈடுபட்ட 10 பேர் கைது | Virakesari.lk

 

இந்நிலையில் குறித்த உத்தியோகத்தரை எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி  சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

ஆரையம்பதியைச் சேர்ந்த குறித்த உத்தியோகத்தர் நீண்ட காலமாக காணிபத்திரம் தொடர்பாக ஆசிரியர்கள் உட்பட பலரிடம் இலஞ்சம் வாங்கி வந்துள்ளதாகவும்.

இந்த நிலையில் ஒருவருக்கு அரச காணி ஒன்றை பெற்றுதருவதாக ஒருவரிடம் 2 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரியுள்ளார்.

இதனையடுத்து குறித்த நபர் கொழும்பு இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவிடம் முறையிட்டதையடுத்து அவர்களின் ஆலோசனைக்கமைய சம்பவதினமான இன்று பகல் செங்கலடி பிரதேச செயலக காணிப்பிரிவில் வைத்து அவர் கேட்ட 2 இலட்சம் ரூபாவை இலஞ்சாமாக கொடுத்தபோது அங்கு இருந்த இலஞ்ச உழல் ஒழிப்பு பிரிவினர் குறித்த உத்தியோகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் மற்றும் களுவாஞ்சிக்குடி  சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 4 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32