(எம்.மனோசித்ரா)
நீண்ட காலமாக 14 வயது சிறுமியொருவரை பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமை தொடர்பில் சிறுமியின் உறவினரான பெண் ஒருவரும், பணத்தை வழங்கி சிறுமியுடன் பாலியல் தொழிலில் ஈடுபட்ட நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் 32 வயதுடைய கிராண்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரும், மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஆணொருவரும் ஆவர்.
இவ்வாறு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 14 வயது சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை அவரது உறவுமுறை பெண்ணொருவர் பலவந்தமாக அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமையவே மேற்குறிப்பிட்ட இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் கொழும்பு - கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்தவராவார். அவர் மருதானையில் உள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று அவரை பிரிதொரு தனிவீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சில தினங்களுக்கு தனது வீட்டில் சிறுமியை தங்க வைத்துக் கொள்வதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ள குறித்த பெண், அந்த தினங்களில் சிறுமியை வெவ்வேறு இடங்களுக்குச் அழைத்துச் சென்று 50,000 ரூபாய் என்ற அடிப்படையில் வெவ்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளார்.
குறித்த சிறுமி 12 வயது முதல் கடந்த இரு ஆண்டுகளாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண், அதனால் கிடைக்கப் பெற்ற பணத்தில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பெற்றுக் கொண்ட வாக்குமூலத்திற்கமைய மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சந்திரகுமார உள்ளிட்ட அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM