பாகிஸ்தானில் கோவில் ஒன்றுக்குள் புகுந்த இளைஞர் ஒருவர் திடீரென சுவாமி சிலைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள நரேன்புரா நகரில் சுவாமி நாராயணன் கோவிலில், நேற்று காலை குறித்த பகுதியைச் சேர்ந்த இந்துக்கள் வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கோவிலுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் திடீரென சுவாமி சிலைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து அங்கிருந்த இந்துக்கள் குறித்த இளைஞரை மடக்கி பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்த நிலையில், பொலிஸார் குறித்த இளைஞரை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே கோவிலுக்குள் புகுந்து சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தால் கோபமடைந்த உள்ளூர் இந்து சமூகத்தினர் பொலிஸ் நிலையம் முன்பு திரண்டு இந்துக்களின் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM