(எம்.எப்.எம்.பஸீர்)
பாணந்துறை மஹனாம நவோதா பாடசாலையின் 6 ஆம் தரத்துக்கு மாணவர் ஒருவரை சேர்ப்பதற்காக இலஞ்சமாக 25 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில், கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றவாளியாக கண்டு நான்கு வருட சிறைத் தண்டனை விதித்த, அதிபர் நதீகா குமுதினி பீரிஸை மேன் முறையீட்டு நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்து விடுதலைச் செய்தது.
குறித்த அதிபர், மேல் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த, சி.ஏ. எச்.சி.சி. 280/17 எனும் மேன் முறையீட்டு மனுவை விசாரித்து, அதன் தீர்ப்பை அறிவித்தே அவரை விடுதலைச் செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி பி.குமார் ரட்ணத்தின் இணக்கத்துடன் நீதிபதி தேவிகா அபேரத்ன இந்த தீர்ப்பை அறிவித்தார்.
மேன் முறையீட்டு மனுதாரரான குறித்த அதிபர் சார்பில் சட்டத்தரணிகளான ஹபீல் பாரிஸ், ஜனகம் சுந்தரமூர்த்தி, நந்த விஜேசூரிய ஆகியோருடன் ஆஜராகி சிரேஷ்ட சட்டத்தரணி எராஜ் டி சில்வா முன் வைத்த வாதங்களை ஏற்றே , அவரை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவித்து விடுதலைச் செய்வதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தது.
மனுவில் பிரதிவாதிகளாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவும், சட்ட மா அதிபரும் பெயரிடப்பட்டிருந்த நிலையில், அவர்கள் சார்பில் சட்டத்தரணிகளான சுபாஷினி சிறிவர்தன மற்றும் அனுஷா சம்மந்தப்பெரும ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
மனு மீதான வாதங்கள் கடந்த நவம்பர் 23,30 ஆம் திகதிகளில் இடம்பெற்ற நிலையிலேயே, மேன் முறையீட்டு மனுதாரரின் வாதங்களை ஏற்றுக்கொண்டு மேல் நீதிமன்றம் குற்றவளியாக கண்ட அதிபரை நிரபராதி எனக் கூறி மேன் முறையீட்டு நீதிமன்றம் விடுவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM