யாழ்ப்பாணம் - எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் படகுடன் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவர்கள் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரையும் எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.
கைதானவர்களில் ஒருவர் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பதால் அவரை எச்சரிக்கை செய்து பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை நேற்று 43 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 6 படகுகளும் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM