இன்று நள்ளிரவு முதல் பாண் உட்பட பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான நிலையான விலைகளை நிர்ணயம் செய்து அறிவிக்க மாட்டோம் என்று அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பொருட்களின் விலைகள் தொடர்பில் நிலவும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக விலையினை நிர்ணயிக்க முடியாது என்றும், பேக்கரி உற்பத்தியாளர்கள் தகுதியான விலைகளில் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும்படி வலியுறுத்தியுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கு நிலையான விலைகளை நிர்ணயித்தது மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு அவர்களின் தயாரிப்புகளை நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்க அறிவுறுத்தியது.
எவ்வாறாயினும் பொருட்களின் நிலையற்ற விலையேற்றம் காரணமாக பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான விலையினை நிர்ணயம் செய்வது நடைமுறைச் சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM