'மாநாடு' படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராக இருக்கும் ' கொரோனா குமார்' படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க இயக்குநர் ஷங்கரின் மகளும், நடிகையுமான அதிதி ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'காஷ்மோரா', 'ஜூங்கா', 'அன்பிற்கினியாள்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கோகுல் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'கொரோனா குமார்'. இதில் நடிகர் சிலம்பரசன் கதையின் நாயகனாக நடிக்கிறார். சிறப்பு தோற்றத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கும் இந்தப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்க, இயக்குவர் ஷங்கரின் மகளும், 'விருமன்' படத்தின் மூலம் புதுமுக நடிகையாக அறிமுகமாகும் நடிகை அதிதி ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
நடிகர் சிலம்பரசன் தற்போது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தயாராகி வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பில் பங்குபற்றி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றவுடன் 'கொரோனா குமார்' படத்தின் படப்பிடிப்பில் அவர் பங்குபற்றவிருப்பதாகவும், இதன் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் நடைபெறும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
பிரம்மாண்ட இயக்குநரான டி. ராஜேந்தரின் வாரிசும், பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கரின் வாரிசும் முதன் முதலாக இணையவிருப்பதால் இந்தப் படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM