ஐந்து மாவட்டங்களில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று திங்கட்கிழமை காலை 08.00 மணி முதல் 24 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ் போராட்டத்தினால் மாவட்ட பொது வைத்திசாலையிலும், நகரில் உள்ள சில தனியார் வைத்தியசாலையிலும் வெளி நோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் என்பன முற்றாகத் தடைப்படுள்ளது.
இந்நிலையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமைபோல் இயங்குகிறது.
எங்களின் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு எமது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம் என நுவரெலியா ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டம் காரணமாக வைத்தியசாலை சேவைகள் முற்றிலும் ஸ்தம்பித்த நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM