இலங்கை பௌத்த பிக்குகள் திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவிற்கு ஆசீர்வழங்கினர். பௌர்ணமி தினத்தில் இணையம் ஊடாக இடம்பெற்ற நிகழ்விலேயே இவ்வாறு ஆசிர்வாதம் வழங்கப்பட்டதுடன் சிறப்புரை ஆற்றியமைக்காக தலாய் லாமாவுக்கு அஸ்கிரி மகா விகாரையின் பிரிவேனா பீடாதிபதி நாரம்பனாவே ஆனந்த தேரர் நன்றி தெரிவித்தார்.
தலாய் லாமாவின் போதனைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இதன் போது குறிப்பிட்டார்.
இலங்கை பௌத்த பிக்குகள் என்ற வகையில் தலாய் லாமாவை ஆசிர்வதிக்க விரும்புவதாகவும் இதன் போது தெரிவித்திருந்தார்.
இலங்கை திபெத்திய பௌத்த சகோதரத்துவ சங்கத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தேரவாத சங்க உறுப்பினர்களுக்கு தலாய் லாமாவின் இரண்டு நாட்கள் மகா சதிபத்தான சூத்திரங்கள் பற்றிய போதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் போது இலங்கை தேரர்;கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து துறவிகள் தலாய் லாமாவிடம் கேள்விகளை எழுப்பினர்.இதன் போது சிறப்புரையாற்றி அனைத்து ஆன்மீக கேள்விகளுக்கும் தலாய் லாமா பதிலளித்துள்ளார்.
திபெத்தீய ஆன்மீக தலைவரான தலாய் லாமா இலற்கை வருதற்கு ஏற்பாடுகள் காணப்பட்ட போதிலும் சீனாவின் கடும் அழுத்தத்தின் விளைவாக இதுவரையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM