கடந்த ஜூலை மாதம் மியான்மர் இராணுவம் பொது மக்களுக்கு எதிராக முன்னெடுத்த தொடர்ச்சியான படுகொலைகளின் விளைவாக குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணியை நேரில் பார்த்தவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் சாட்சியங்களை அடிப்படையாக கொண்டே பிபிசி இந்த செய்தியை தெரிவித்துள்ளது.
17 வயதுக்குட்பட்ட சிலர், கிராம மக்களை சுற்றி வளைத்து, ஆண்களை பிரித்து கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் முதலில் சித்திரவதை செய்யப்பட்டு ஆழமற்ற புதைகுழிகளில் புதைக்கப்பட்டதை காணொளி காட்சிகள் மற்றும் சம்பவங்களின் புகைப்படங்கள் காட்டுகின்றது.
ஜூலை மாதம், மத்திய மியான்மரில் உள்ள சகாயிங் மாவட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கோட்டையான கானி டவுன்ஷிப்பில் நான்கு வெவ்வேறு சம்பவங்களில் இந்த படுகொலைகள் அரங்கேறியுள்ளன.
மியன்மாரில் பெப்ரவரி ஆட்சிக் கவிழ்ப்பில் நாட்டின் கட்டுப்பாட்டை கைப்பற்றியதில் இருந்து இராணுவம் பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்கொண்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM