ஆ.ராம்
Awarelogue முன்முயற்சி, சர்வதேச விவகாரங்களுக்கான ஜப்பானிய கற்கை நிறுவனம் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் ‘இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் வெளியுறவுக்கொள்கைகள் ; ஜப்பான் மற்றும் இலங்கை குறித்த பார்வைகளும், கொள்கைகளும்' எனும் தலைப்பில் விசேட கலந்துரையாடலொன்று மெய்நிகர் வழியில் இடம்பெற்றிருந்தது.
Awarelogue முன்முயற்சியின் ஸ்தாபகர் ஜோர்ஸ் கூக்கின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் முதலில் உரையாற்றிய இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி “இலங்கைக்கும், ஜப்பானுக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் 1952ஆம் ஆண்டிலிருந்து காணப்படுகின்றன.
அந்த வகையில் இலங்கையின் தூதுவராக கடமையாற்றுவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.
அண்மைக்காலமாக ஜப்பான், இலங்கைக்கு கடல்சார் மற்றும் கல்விசார் விடயங்களில் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. ஜப்பான் இலங்கை கடற்படைக்கு மேம்பட்ட ஒத்துழைப்புக்களை அளித்து வருகின்றது.
அடுத்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 70ஆண்டுகள் பூர்த்தி அடையவுள்ளன.
சமகாலத்தில் இந்தோ-பசிபிக் பிராந்தியமான இராஜதந்திர விடயங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது.
அதன் அமைதியும், சுபீட்சமும் மிகவும் முக்கியமானதொரு விடயமாகும். ஜப்பானின் இராஜதந்திர விவகாரங்களில் இந்தோ-பசிபிக் பிராந்தியம்முன்னிலையில் உள்ளதொரு வியடமாகவும் உள்ளது.
ஜப்பானின் புதிய பிரதமர் புமியோ கிஷிடோ தனது கொள்கை உரையில், சுதந்திரமானதும், வெளிப்படைத்தன்மை உடையதுமான இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டிக்கின்றார்.
இந்தோ - பசிபிக் மூலோபாயத்தில் இலங்கை முக்கியமானதொரு இடத்தினை வகிக்கும் நாடாகும்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-12-19#page-22
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM